நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Thursday, 19 May 2016

கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் மாதந்தோறும் சத்தியநாராயண விரதம்

கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் மாதந்தோறும் சத்தியநாராயண விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. மூன்றாவது முறையாக 21-04-16 அன்று கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் சத்திய நாராயண விரதபூஜை நடைபெற்றது. ஆதம்பாக்கம் முனுசாமி, பெருங்களத்தூர் மீராபாய், சங்கர், சாய்ராம், சம்பந்தம், சாயி ஸ்ரீதரன், டாக்டர் அதிரூபன் பாலாஜி, பிரேமா, ஆவடி சீதா அம்மா, ஜோதி, தாம்பரம் அஜீதா உட்பட பலர் கலந்துகொண்டார்கள். ஸ்ரீ சாயி வரதராஜன் இந்த விரத பூஜையை நடத்தி வைத்தார்.
அடுத்த மாதம் பவுர்ணமி நாளில் மாலை நான்கு மணியளவில் கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் சத்தியநாராயண விரத பூஜை கடன் நிவர்த்திக்கான சிறப்பு விரதமாக நடைபெறுகிறது.

No comments:

Post a Comment