நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Monday, 16 May 2016

மரம் நடலாம் வாங்க….

கீரப்பாக்கம் ஆலயத்தைச் சூழ்ந்திருக்கிற மலைப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கை வளத்தைக் காக்கவும், மழை வளத்தையும் மண் வளத்தையும் பெருக்கவும் விரும்புகிறவர்கள் ஒரு செடியை நட்டுக் கொடுத்து அதைப்பராமரிக்க நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் அளித்தால் போதுமானது. மரக் கன்றின் வேலியில் தங்கள் பெயரைப் பொறித்துக் கொள்ளலாம்.
இச்சேவையின் மூலம் ஒரு மரக்கன்றை மட்டுமல்ல, பத்து கிராமத்து நபர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாகும். நாம் நல்ல சுற்றுச் சூழலை உண்டாக்கும் ஒரு சேவைக்கும் சொந்தக்காரர் ஆவோம்.

No comments:

Post a Comment