நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Thursday, 12 May 2016

கீரப்பாக்கம் மலையில் பாபா விக்ரஹம்

ஏப்ரல் மாத சீரடிப்பயணம் கீரப்பாக்கம் பாபா ஆலய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
இந்த யாத்திரையில் கலந்துகொண்ட 87 சாயி பக்தர்களும் தங்கள் பங்களிப்பாக ஆறாயிரம் ரூபாய் நன்கொடை தர, சாயி வரதராஜன் தனது பங்களிப்புக்கு மீதம் செலுத்தி இரண்டரை அடி உயரத்தில் பளிங்கு சிலையை வாங்கித் தந்திருக்கிறார்.
இந்த விக்கிரகம் ஆதம்பாக்கம் முனுசாமி, ஸ்ரீதரன், நாகர்கோவில் சிவக்குமார், திருநின்றவூர் பாலாஜி, கஜேந்திரன், யுவராஜ் ஆகியோரால் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு, கீரப்பாக்கம் ஆலயத்தில் வைக்கப்பட்டது.
1, மே 2016 ஞாயிறு அன்று இந்த விக்ரகம் மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யாத்திரைக்கு வந்த சாயி பக்தர்கள் கலந்துகொண்டு இதைப் பிரதிஷ்டை செய்தனர்.
முன்னதாக, பாண்டிச்சேரி பாபா மாஸ்டர் விமானம் மூலம் சீரடி வந்திருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் சேர்ந்து மூன்றரை அடியில் பாபா விக்கிரம் வாங்கித் தருகிறார்கள். இதற்காக முன்பணம் சாயி வரதராஜன் மற்றும் கோவை டாக்டர் முருகையன் ஆகியோர் முன்னிலையில் கடையில் தரப்பட்டுள்ளது.
பாபா மாஸ்டர் தனது சீடர்கள் வானகரம் ராஜேந்திரன், குமரேசன் ஆகியோரிடம் விக்கிரகம் வாங்கித் தருவது பற்றி உடனடியாகத் தெரிவித்துவிட்டார். இந்த விக்கிரகமும் விரைவில் நிறுவப்பட உள்ளது.

No comments:

Post a Comment