நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Friday, 16 May 2014

கீரப்பாக்கத்திற்கு பாபா வந்த தகவல்..பகுதி 4

ஆலயம் கட்டும் இடத்தில் அவர்களை நிறுத்தி விசாரித்தேன். வேலூரைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்ற சாயி பக்தர் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர். இவரை நான்கு பக்தர்கள் காரில் அழைத்து வந்தார்கள். நடக்க முடியாத இவரை காரிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
என்னிடம் உதியில்லை. தரையிலிருந்த புழுதி மண்ணை எடுத்து உதியாக அவருடைய உடலிலும் நெற்றியிலும் பூசி, பிரார்த்தனை செய்து அனுப்பினேன். அவருக்கு உடல் நலம் பெறவும், பேரணாம்பட்டுக்கு வேலை மாறுதல் கிடைக்கவும் பிரார்த்தனை செய்யச் சொன்னார். நீங்களும் வேண்டுங்கள்.
அத்தியாயம் 33 ல், கல்யாண் என்ற நகருக்குப்புறப்பட்டுச் சென்ற நானாவிடம், பாந்த்ரா வாசி ஒருவர், தன் மகள் பிளேக் நோயால் அவதிப்படுவதாக தெரிவித்தார். தாணே ரயில் நிலையத்தில் நானாவுக்கு இந்தச் செய்தி கிடைத்தது. உடனே சாலையிலிருந்த புழுதி மண்ணில் ஒரு சிட்டிகை எடுத்துக்கொண்டார். சாலையில் நின்றவாறே சமர்த்த சாயீயை மன்றாடிப் பிரார்த்தித்து, புழுதி மண்ணை தம் மனைவியின் நெற்றியில் இட்டார். அங்கோ, அந்த பக்தரின் மகள் குணமடைய ஆரம்பித்தாள்.. என எழுதப்பட்டுள்ளது.
சாயியின் மகத்துவம் இப்படிப்பட்ட அற்புதம் நிறைந்தது என்பது உண்மையானால், நான் பிரார்த்தனை செய்து பூசிய புழுதி மண்ணும் நலம் அளிக்கட்டும் என பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனையை நீங்களும் அங்கீகரித்து பாபாவிடம் வேண்டுங்கள்.
இதுவரை இந்த ஆலயம் தொடர்பாக நடந்துள்ள விக்ஷயங்கள். இதற்கு மேல் நடக்கிற அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தலவரலாற்றுடன் சேர்க்கப்படும்.
எனக்குள் பாபா என்கிற பெரும் சக்தி குடி கொண்டு உள்ளது. அது உங்களுடைய கைங்கரியத்தை வைத்து தன்னுடைய வேலையை என்னை வைத்து வாங்கிக் கொள்கிறது. அவ்வளவே வேப்பமரமும் புற்றும் அமைந்துள்ள இடத்தில் வடக்கு நோக்கிய வாசல் அமைத்து பரிகாரக் கோயில் உருவாக்க ஓர் அளவை ஸ்தபதியிடம் குறித்து, கோயில் அமையும் இடத்தை அடையாளக் கோடிட்டு தந்தேன்.
12- 2 - 14 அன்று காலையில், கோயில் துவக்க ஹோமம் அனுபூதி சித்தரால் நடைபெற்றது. சாயி  ஸ்ரீதரன், ஆறுமுகம் -  மாலா தம்பதியர், வேணுகோபால் - லதா தம்பதியர், சாயி ஜெயச்சந்திரன், கலியன் -  சிவகாமி தம்பதியர், கார்த்திக் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். நான் தாமதமாக அவ்விடத்திற்கு வர நேரிட்டதுவந்து பார்த்தால், நான் அளவு குறித்த இடத்திற்கு மாறாக, வேறு இடத்தை ஸ்தபதி தேர்வு செய்திருந்தார். புற்று ஈசான்யத்தில் வருமாறு கோயில் அமைத்தால் நன்றாக இருக்கும் என்றார். சரி என ஒப்புக்கொண்டேன். ஜேசிபி மூலம் கடைக்கால் தோண்ட ஆரம்பித்தார்கள். வெறும் பாறையாக இருக்கிறது. தோண்ட முடியவில்லை என்றார்கள். வேறு என்ன செய்யப் போகிறீர்கள்? என்றேன்.
நான் அடையாளக் குறியிட்டுக் கொடுத்த இடத்தில் கடைக்கால் தோண்டச் சொன்னேன். அற்புதமாகத்தோண்ட முடிந்தது. இடத்தைத் தேர்வு செய்தது நானல்ல, பாபா என்பதை புரிந்துகொண்டேன். மற்றவர்களும் உணர்ந்தார்கள்.
அதே சமயம், எதிர்பார்க்காத பெரிய தடைகள் வந்தன. அந்தத் தடைகள் கீரப்பாக்கம் பகுதியில் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இந்த அற அமைப்பு மேற்கொண்ட செயல்பாடுகளை முடக்குவதாக அமைந்தது.
இறை பணி என்பது கடவுளுக்குச் செய்கிற சேவையல்ல. கடவுள் பெயரில் பொது மக்கள் நன்மைக்காக,  எதிர்கால சந்ததிக்காக செய்யப் படுகிற சேவை.
கோயில் போன்ற அற அமைப்புகளை நிறுவி செய்யப்படுகிற தொண்டு, பலதரப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும். இந்தத் தொண்டு செய்கிறவர்கள், செய்ய முன்வருவோர் ஆகியோரை பொதுமக்களும், அரசும், அரசுத் துறையும் ஊக்கு விக்க வேண்டும். சுயநலம் உள்ளவர்கள் மத்தியில் பொது நலம் காக்க நினைப்பவர்கள் சிலரே! இந்த வெகு சிலரையும் நாம் முடக்கிவிடக் கூடாது. மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அதைப் பற்றி  ………………………..

                                                                                                                                                      (தொடரும்)

No comments:

Post a Comment