நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Tuesday, 6 May 2014

புது வீடு வாங்க, கட்ட சாயி மந்திரம்!

ஆளுக்கொரு செங்கல்....அதுவே நாம் சாயியிக்கு செய்யும் கைமாறு...அவரை உச்சியில் அமர்த்தி நாம் அவரது பாதத்தினை சேவிப்போமாக.

வீடு கட்ட முடியவில்லை, வீடு கைவிட்டுப்போகிறது என்று கலங்குவோர் இனி கவலைப்படவேண்டியதில்லை. ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக்கொடுத்தால் வீடு வாங்கவும், கட்டவும் முடியும் என்பது ஐதீகம்.

சாயி பக்தர்கள், சாயி ராம் என எழுதி அதை பாபா ஆலயம் மைக்கக்கொடுத்தால் இதே பலன் கிட்டும். மிகப் பெரிய பாபா ஆலயம் வண்டலூர் -  கேளம்பாக்கம் சாலையில் கண்டிகையின் உட்புறம் கீரப்பாக்கம் என்ற இடத்தில் அமைகிறது. நீங்கள் இங்கே செங்கற்களை வாங்கி அதில் சாயி நாமம் எழுதிக் கொடுத்து, பலன் பெறலாம்.

No comments:

Post a Comment