அயப்பாக்கத்திலிருந்து வரும் பார்வதி அம்மாவின் தந்தையார் வரதராஜ முதலியார். தி.நகர் மற்றும் சைதாப்பேட்டைக்கு இடையில் கண்ணம்மா பேட்டை என்ற
இடம் இருக்கிறது. கண்ணம்மா
பேட்டை சென்றால் சென்னையிலேயே புகழ்பெற்ற இடுகாடு என்றுதான் எல்லோருக்கும் தெரியும். இந்த இடுகாட்டு நிலத்தை அளித்தவர்
வரதராஜ முதலியார். அவர்களின்
துணைவியார் பெயர் கண்ணம்மா. அவருடைய பெயரால்தான் இந்த இடம் அழைக்கப்படுகிறது.
பல சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் அம்பாள் ஆலயங்கள் என பல ஆலயங்களுக்கு தானம் தந்து சொத்துக்களை இழந்தவர். இவருக்கு பதினாறு பிள்ளைகள்.
ஆண்கள் ஐந்து பேர். பதினோறு
பெண்கள். இவர்களில் தற்போது மூன்று பேர்தான் உயிரோடு இருக்கிறார்கள். மூத்தவர் வேதாச்சலம் மும்பையில் வசிக்கிறார். பார்வதி அம்மா அயப்பாக்கத்தில் வசிக்கிறார். ஆனந்தன் உடல்நலம்
பாதிக்கப்பட்டு தனியாக வசிக்கிறார்.
பார்வதி அம்மாவின் மகன் மனோகரன். சாயி பக்தரான இவர் சமீபத்தில்
காலமாகி விட்டார். இவர் நினைவாக
கீரப்பாக்கம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக ஏதேனும் விக்ரஹம் வாங்கித்தருவதாக பார்வதி
அம்மா கூறியிருந்தார். அவரிடம்
சிவபெருமான் விக்ரஹத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டிருக்கிறோம். கீழேயுள்ள பாபா ஆலயத்தில் ராகு - கேது பரிகார லிங்கமாக இது பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதிஷ்டை செய்யப்படும்போது அது பற்றிய விவரம் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment