நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Thursday 26 May 2016

கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் பெருமாள்

கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் பெருமாள் வழிபாட்டுக்கு அர்ச்சகர் யாரும் நியமிக்கப்படவில்லை. பக்தர்கள் தாங்களாக இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்யலாம்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விரும்புவோர் முன்னதாக அனுமதி பெற வேண்டும்.
மலையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவற்றுக்குத் தண்ணீர் வாங்கித் தருவோர் கோயிலில் 500 ரூபாய் செலுத்தலாம்.
கீரப்பாக்கம் கோயிலுக்குப் பசுமாடு ஒன்று ரவி சங்கர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. சினையாக உள்ள இந்த மாட்டுக்கு உணவு, புல் போன்றவற்றை அளிக்க விரும்புவோரும் கீரப்பாக்கம் கோயிலை அணுகவும்.

மலை மீது வந்த மலையப்ப பெருமாள்

கீரப்பாக்கம் இந்து- முஸ்லிம்- கிறித்தவர் என மும்மதத்தினர் ஒற்றுமையோடு வாழ்கிற ஊர். பல இன மக்கள் இங்கே பாசத்துடன் பிரச்சினையின்றி வாழ்கிறார்கள்.
பொருளாதாரத்தில் முன்னேறியவர்களும், பின் தங்கியவர்களும் இங்கே வாழ்கிறார்கள். கிராமம் என்றால் சண்டை சச்சரவுகள், கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்றவற்றை சகஜமாக பார்க்கலாம் என்பார்கள். எல்லாவற்றுக்கும் விதிவிலக்கானது இந்த ஊர்.
இப்படிப்பட்ட சிறந்த ஊரில் பாபா அமர்ந்து ஆளுகிறார். இப்போது பாபா அமர ஏற்பாடு செய்திருந்த மலை மீது யாரும் எதிர்பார்க்காத வகையில் மலை மேல் பெருமாள் எழுந்தருளியுள்ளார். மலையில் கார்த்திகை மாதத்தில் மக்கள் தீபமேற்றி வழிபடுகிறார்கள். முதல்நாள் சிவ கார்த்திகை, மறுநாள் விஷ்ணு கார்த்திகை. பாரம்பரியமாக பாறைமீது தீபம்ஏற்றி வந்தார்கள். இதற்காக அக்னி குண்டம்ஒன்றை அமைத்துத் தந்திருக்கிறோம்.
பஞ்சாயத்து அனுமதியோடு கீரப்பாக்கம் மலை மீது பாபா ஆலயத்திற்காக சாலையமைத்து, தரையை சமப்படுத்தி ஆலயத்திற்கான அடித்தளம் அமைத்து, வரு பொருளையும் உறு பொருளையும் செலவிட்டு, எத்தனையோ ஆண்டுகளாக வீணாகக் கிடந்த இந்த இடத்தை சுத்தப்படுத்தியிருந்தோம்.
வாழ்க்கையின் உச்சத்திற்குப் போக கஷ்டத்தை பொருட்படுத்தாமல் உழைத்து சிறிது சிறிதாக முன்னேறிப் போகவேண்டும். இப்படி உழைப்பவர்களுக்கு எப்படி பலன் உறுதியோ அப்படி வணங்குவோருக்கும் பலன் உறுதி என்பதைப் பறை சாற்றும் விதமாக பெருமாள் பிரம்மாண்ட ஸ்வரூபியாக வந்திருக்கிறார்.
மக்கள் பணக் கஷ்டம், கடன் தொல்லை, வேலையின்மை போன்றவற்றால் அவதிப் படுவதை நீக்கி பொருளாதார வளம் தர பெருமாளை வேண்டி இவருக்கு குபேர பெருமாள் எனப்பெயர் சூட்டியுள்ளோம். பாபாவே பெருமாளாக அமர்ந்தார் என்ற திருப்தி ஏற்பட்டிருக்கிறது.
பெருமாள் ஆலயத்திற்கு மண்டபப் பணி, கோபுரப் பணி, தூண்கள், கதவு, வாசற்கால், படிகள் போன்றவை ஏற்படுத்த விரும்பும் நாராயண பக்தர்கள் இதற்கான செலவை ஏற்க முன்வந்தால், விருப்பத்துடன் வரவேற்கிறோம்.
தங்களுடைய கைங்கர்யம் சார்ந்த அனைத்து தகவல்களையும் கீரப்பாக்கம் பாபா ஆலயத்திலுள்ள முன்னாள் தாசில்தார் சம்பந்தம் அவர் களிடம் தெரிவிக்கலாம். அல்லது பெருங்களத்தூர் பாபா ஆலய நிர்வாகியிடமோ, ஸ்ரீ சாயி வரதராஜன் அவர்களிடமோ தெரிவிக்கலாம். பாபா உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

Thursday 19 May 2016

ஆலயம் அமைக்க வாருங்கள்

பெருங்களத்தூர் பாபா பிரார்த்தனை மையம் கீரப்பாக்கத்தில் பாபா ஆலயம் நிறுவும் சேவையைச் செய்து வருகிறது. மலைப்பாதை அமைத்து கீழ்ப்பக்கத்தில் பாபாவுக்கு கருங்கல் விக்ரஹம் நிறுவப்பட்ட கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இதே இடத்தில் பளிங்கு சிலை நிறுவும் திட்டம் உள்ளது. அன்னதானக் கூடம், பக்தர் தங்கும் இடம் ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது மலையின் மீது பாபா அமர வேண்டிய இடத்தில் பெருமாள் விக்ரகம் நிறுவப்பட்டு கோயில் அமைந்துவருகிறது. இதே பகுதியில் பாபாவுக்கு தனிக் கோயில் நிறுவும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது.
தற்போது கட்டிடம் முழுமையடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எவ்வளவோ இழப்புகள் தடைகளைத் தாண்டி வளர்ந்துகொண்டிருக்கும் இந்த ஆலயப் பணிக்கு சாயி தரிசனம் வாசகர் களின் உதவியை நாடுவதுப் பொருத்தமானது என நாங்கள் கருதியதால் இந்த வேண்டுகோளை முன்வைத்துக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தில் கவுரி என்ற பெண்ணிடம் பாபா கூறியதைப் படித்துப்பாருங்கள்:
கோயிலுக்காகப் பணம் செலவு செய்யப்பட வேண்டும் என்று உன் கணவனைத் தொந்தரவு செய்யாதே. உன்னுடைய பக்தியும் விசுவாசமும் இறைவனுக்குப் போதும். நீ கொடுக்க விரும்புவதைக் கொடு.
உன்னுடைய பணத்திலிருந்து மனம் உவந்து ஒரு பைசா கொடுத்தாலும் அது ஒரு லட்சத்திற்கு ஈடாகும். கணவனைக் கலந்தாலோசித்த பிறகு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்.
வீணாகச் சலிப்படையாதே. கொடுப்பதை மனம் உவந்து கொடுக்க வேண்டும். தனக்கு எது சொந்தமோ அதிலிருந்து எவ்வளவு சிறியதாக இ ருந்தாலும் அதை அர்ப்பணம் செய்யவேண்டும்.
இது விஷயத்தில் பக்தி பாவமே பிரதானம். அது உனக்கு இருப்பது கடவுளுக்குத் தெரிந்திருப்பதால் உன்னைக் கொடு கொடு என்று சொல்கிறார். இறைவனுடைய உந்துதலை சரியாகப்புரிந்துகொள்.
ஆகவே, உன்னிடம் எவ்வளவு சிறிய தொகை இருப்பினும் சரி, அதைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இரு. அன்பில்லாமல் எதையும் அளிப்பது உசிதமன்று. இறைவன் அதை சிறிதும் விரும்புவது இல்லை.
பக்தி பாவனை இல்லாமல் எவன் கொடுக்கிறானோ, அவன் தருவது எந்த மதிப்பையும் பெறாது. கடைசியில் அதற்கு அடியோடு பயனில்லாமல் போய்விடும். அதை அவன் தாமதமின்றி அனுபவப் பூர்வமாக அறிந்துகொள்வான்.
தெய்வக் குற்றம் நேருமென்று பயந்தோ, சமூகத்தின் உந்துதலுக்கு இணங்கியோ, தர்ம சங்கடத்திலிருந்து விடுபடவோ, அன்பின்றி அளிக்கப்படுவதை இறைவன் விரும்புவதில்லை. அன்புடன் அளிக்கப்படுவது எத்துணை சிறியதாக இருந்தாலும் இறைவன் விலை உயர்ந்ததாக அதனை ஏற்றுக்கொள்கிறார்”. இப்படி எழுதப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளாகப் போராடி மலையின் கீழ்ப்பக்கத்தில் பாபா ஆலயம், அன்னதானக்கூடம், போர்வெல், மலைக்குச் செல்ல சாலை என அமைத்தோம். தற்போது பாபா ஆலயம் கீழ்ப்பகுதியில் முடிந்த நிலையில் தற்போது மலையில் பெருமாள் ஆலயம் அமைவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
நான் அமர்ந்தால்தான் வேலை எழ விடுவேன் எனப் பெருமாள் கூறியதாக நரசிம்மாச்சாரியார் கூறிய வார்த்தைகள் உண்மையோ என நினைக்கும் வண்ணம் வேலைகள் துரிதமாக நடைபெற ஆரம்பித்துள்ளன. முதல் கட்டமாக பெருமாள் ஆலயத்தை முழுமையாக வடிவமைக்க வேண்டிய நிலையில் இருப்பதால் பக்தர்கள் மற்றும் சாயி தரிசனம் வாசகர்கள் மீண்டும் ஒருமுறை தங்களால் முடிந்த சில பொருட்களை வாங்கித்தந்தால் நலமாக இருக்கும் என நம்புகிறோம்.
பெருமாள் ஆலயத்தின் தொடர்ச்சியாக மலையில் பாபா ஆலயம் நிச்சயம் எழும்பும். இது மட்டும் இல்லாமல் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, ஊர் அனுமதியுடன் சிவனைப் பிரதிஷ்டை செய்யவும் சாயி பக்தர்கள் முன் வந்து இருக்கிறார்கள்.
உங்களுடைய பங்களிப்பையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
வேலையாட்கள் சம்பளம் போன்றவை இல்லாமல் கம்பி வகையறாக்களில் 20 எம்.எம். கம்பி 40, 16 எம்.எம். கம்பி 40, 12 எம்.எம். கம்பி 200, 10 எம்.எம்.கம்பி 200 தேவைப் படுவதாகக் கூறியிருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு கம்பி என்றால்கூட ஐநூறு வாசகர்கள் சேர்ந்தால் இந்த கம்பியை வாங்கித் தந்துவிட முடியும். அதேபோல முன்னூறு வாசகர்கள் சேர்ந்தால் ஆளுக்கு ஒரு மூட்டை சிமெண்ட் வாங்கிவிடலாம்.
ஆளுக்கு நூறு ரூபாய் என்றால்கூட 180 பக்தர்கள் முக்கால் ஜல்லி எட்டு சிஎப்டி அனுப்பி வைக்கமுடியும். இந்தப் பணிகள் மே மாதத்திற்குள் முடிவடைந்து கூரைத் தளம் அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இந்த உதவியை செய்து தர அன்புடன் வேண்டுகிறோம்.
கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் முன்னாள் தாசில்தார் சம்பந்தம் இருக்கிறார். நேரடியாக அவரிடம் பொருளாகவோ ரொக்கமாகவோ சமர்ப்பிக்கலாம். பெருங்களத்தூர் சாயி பாபா ஆலயத்தில் சாயி வரதராஜனை நேரில் தொடர்பு கொண்டு இந்த கைங்கர்யத்தைச் செய்யலாம்.