கடந்த இதழில் ராஜா ராம் என்ற சாயி பக்தர், கீரப்பாக்கம் பாபா ஆலயத்திற்குச் செய்த சேவை பற்றி படித்தபோது எங்களுக்கும் செல்லவேண்டும் என்று தோன்றியதால் சென்றிருந்தோம்.
மலையில் பிரம்மாண்டமாக பெருமாள் விக்ரஹம் நிறுவப்பட்டு
கோயில் கட்டுமானப் பணி
தொடர்ந்துகொண்டிருந்தது. ஆலயத்திற்கான பெரும் பாலான செலவுகளை சாயி வரதராஜன் செய்வதாகக் கேள்விப்பட்டு பிரமித்துப் போனோம். எங்கள் பிரமிப்புக்குக் காரணம், ஒரு சாதாரண மனிதனால் எப்படி இவ்வளவு பெரிய திட்டத்தை எடுத்து நடத்த
முடிகிறது என்பதுதான்.
பெருமாள் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதைப் பற்றி
எங்கள் வீட்டில் கூறியபோது, என் தந்தையார் உண்மையாகவா?
என பலமுறை கேட்டுக்கொண்டிருந்தார். பெருமாளை அவ்வளவு சீக்கிரம்
எளிதாகக் கொண்டு வந்து யாராலும்
நிறுத்தமுடியாது. இவர் எப்படி நிறுத்தினார்? எனக் கேட்டார். பெருமாளை வெயிலில் இருக்கவிடக்கூடாது, உன்னால் முடிந்ததைச் செய் எனக் கூறினார்.
இது எப்படி சாத்தியமாகும் எனக் கேட்டபோது, வெறும் ஐம்பது பேர் தனித்தனி
குழுவாக இணைந்து நமக்குள் ஒரு குழுவுக்கு ஐம்பதாயிரம் வீதம் சேர்த்தாலே இந்தக் கோயில் பிரம்மாண்டமாக அமையும். அந்த மனிதனுக்குச் சுமையும்
குறையும்” என்று கூறினார். இது நல்ல யோசனையாகத்தெரிந்தது. எனவே சாயி தரிசனம்
வாசகர்களுக்கு இந்த யோசனையை முன்வைக்கிறேன்.
இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டுமானால் நிறைய தூரம்
அவர் பயணிக்க வேண்டியிருக்கும்.
எங்களால் முடிந்தது என ஐம்பது மூட்டை சிமெண்ட் வாங்கிக்
கொடுத்துவிட்டு வந்தோம். தொடர்ந்து சின்னச் சின்ன சேவைகளைச் செய்வதாக வாக்குக் கொடுத்தோம்.
விருப்பமுள்ளவர்கள் இணைந்து இந்த சேவையை சாதிக்கலாம். வருவீர்களா?
-என்.எஸ். அனந்தராமன்,
அரும்பாக்கம்
No comments:
Post a Comment