எவ்வளவு
தவறு செய்தவர்களானாலும், அவர்களை வலிய கடிந்துகொள்ள மாட்டார். நீங்கள் தப்பு செய்கிறீர்கள், இது இயல்புதான்.
ஆனால், இப்போது நீங்கள் சாயி பக்தர், உங்களைத்
திருத்திக் கொள்வது உங்களுக்கு நல்லது, பிறருக்கும் நல்லது
என அன்பாக, மெதுவாக
சொல்வார். இதனாலேயே அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.
ஓய்வில்லாமல்
உழைத்ததினாலேயே அவரது இடுப்பு எலும்புகள் தேய்ந்துவிட்டிருக்கின்றன. மருத்துவர்கள் அவரை கடிந்துகொண்டிருக்கிறார்கள். அந்தக் கால சங்க
இலக்கியம் முதல் சாஸ்திர நு}ல்கள்
வரை அவருக்கு அத்துப்படி. அவற்றிலிருந்து மேற்கோள் காட்டி பேசுவார்.
இத்தகைய
ஐயாவின் மனதில் வாழ்வது என்பது
சாயி பாபாவின் சந்நிதியில் வாழ்வதற்கு ஒப்பானது.
ஐயா
உடல்நலமின்றி இருப்பதைக் கேள்விப்பட்டும் உடனடியாகப் போய் பார்க்கமுடியாத நிலை.
தேனி போல சுறுசுறுப்பாக இருந்தவரை,
படுத்தப் படுக்கையில் பார்க்க தைரியமில்லாத மனம்..
அவரைப்
பார்த்தபோது, வலியால் துடித்துக்கொண்டிருந்தார். எப்போதும் சாயி
சாயி என்று சொன்ன வாய், இப்போது
பாபா.. வலிக்கிறது.. எனச்சொல்வதைக் கேட்க, வருத்தமாக இருந்தது.
நான்
சோர்வடையும் போதெல்லாம், பாபா எப்படிஅவருக்குச் சொல்வாரோ
தெரியாது. உடனடியாகப்போன் செய்து, என்ன சோர்வு?
ஏன் கவலை? பாபா பார்த்துக்கொள்வார். பொறுப்பை அவரிடம்
விட்டு விட்டு, பொறுமையாக இருங்கள் என்று சொல்வார்.
;நான்,
என் மனைவி பிள்ளைகள் ஆகியோர்
பாபா மாஸ்டரை, பாபாவின் மறு உருவமாகவே நினைத்து
வணங்கி வருகிறேhம்.
நிறைய
பேர், ”பாபா மாஸ்டர் நினைத்தால்,
உங்கள் கோயில் பெரிதாக உருவாகும். அவருக்குத்
தெரியாத பணக்காரர்கள் கிடையாது” என்பார்கள். நாங்கள் அதை விரும்புவதில்லை.
”பாபா
மாஸ்டர் ஆசீர்வதித்தால் போதும், ஏழைகளைக் கொண்டே பாபாவுக்குப் பெரிய
கோயில்களை அமைக்கமுடியும்.
பணக்காரன் என்பவன் பணம் வைத்திருப்பவன் அல்ல, நல்ல மனம்
உடையவன். அவரது ஆசீர்வாதம் அத்தகைய மனங்களை என் பக்கம் திருப்பித்
தரும்!” என்பேன்.
அவரது
ஆசீர்வாதத்தால்தான் கீரப்பாக்கத்தில் கோயில் அமைந்துவருகிறது. சாயியின் உத்தமமான தொண்டர் அவர். நமக்கு கிடைத்தற்கரிய
குரு. அவர் நன்றாக வேண்டும் என மானசீகமாக எப்போதும்
வேண்டிக்கொள்கிறேன்.
அவர்
அடிபட்டு, மருத்துவமனையில் மயக்க நிலையில் இருந்த போது, பாபா
அவர் அருகே அமர்ந்து உரையாடியிருக்கிறார். இந்த விவரத்தைக் கேட்டுக்
கொண்டிருந்தவர்கள் சிலிர்த்திருக்கிறார்கள்.
இதைப் பற்றி விவரமாக அடுத்த இதழில்
கேட்டு எழுதுகிறேன்.
அது
இருக்கட்டும். கீரப்பாக்கத்தில், விக்ஷமிகளால் உடைக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டபோது, கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. ஆனால் பாபா, “நீ
போ.. அமைதியாக இரு.. உன் வேலையைப்பார்..
நான் அவர்களிடம் உன் சார்பாக எப்படி போராடுகிறேன் என்பதை மட்டும்
வேடிக்கை பார்!” என்றார். இதே
செய்தியை யாரோ ஒரு சாயி பக்தை
எனக்கு அனுப்பியும் இருந்தார்.
நான்,
எனக்குத் தெரிந்த அதிகாரத்தைப் பயன்படுத்த
நினைத்திருந்தேன். ஆனால், பாபாவின் கட்டளைக்குப் பிறகு, அனைத்தையும்
விட்டு அமைதியானேன்.
கோயிலை
இடித்தவர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் இதுவரை உருப்பட்டதாக வரலாறு
இல்லை. அதன் விளைவும், பலமும்
அவர்கள் மேலும் அவர்கள் சந்ததியின் மேலும்
நிச்சயம் இருக்கும். தெய்வம் எப்போதும் நின்றே
கொல்லும்..
ஒருமுறை
இந்த ஊர் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்
என பாபாவிடம் பிரார்த்தனை செய்து, பல லட்ச
ரூபாய்களை செலவழித்திருக்கிறேன்.
இப்போது ஒரு சிறிய இடையூறால், நான் இந்த ஊரை
சபிக்க விரும்பவில்லை. எத்தனை இடையூறு வந்தாலும்,
என் குரு விரும்பிய ஊர் இது. இந்த
ஊர் நிச்சயம் வளரும். தவறு செய்தவர்கள் ஒருநாள்
தவறுக்கு மனம் வருந்துவார்கள். இதனால்
தளரக்கூடாது என்று விட்டுவிட்டேன்.
கீரப்பாக்கம்
தலைவர் மூரிகிருக்ஷ;ணனை சந்தித்த போது, கொத்துமலையில்
முதலில் விநாயகர் ஆலயத்தை எழுப்புமாறு கூறினார்கள். ஜமீன் வாரிசு வெங்கட்ராமன், அவரது மகன்
சந்துரு ஆகியோர், ஃநாலரை வருடமாக பூiஜ போட்டதோடு பிள்ளையார்
கோயில் கட்டப்படாமல்
இருக்கிறது..ளூ என்றார்கள்.
கட்டித்
தருகிறேன். ஃகணபதிக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்?ளூ என்றேன்.
இதுவரை
சூட்டவில்லை என்றார்கள். ஃமாணவ ரூhன கணபதி எனப்
பெயர் வையுங்கள். கூடவே, சரஸ்வதிடூ மூயக்கிரீவர்
சிலைகளை பிரதிக்ஷ;டை செய்யுங்கள். பள்ளிப் பிள்ளைகள் அனைவரும்
அருள் பெறட்டும்-ளூ என்றேன்.
ளூஜமீன்
அரண்மனையின் படிகள் இருக்கின்றன. அவற்றை
என்ன செய்யலாம்?ஃ எனக் கேட்டார்கள்.
ஃகோயில்
அமைந்த பிறகு, தனி வாயில்
வைத்து, அந்தப் படிகளைப் பொருத்துங்கள்,
அதற்கு ராஜபடிகள் எனப் பெயர் சூட்டுங்கள்..
இந்தக் கோயில் புகழ் பெறும்-ளூ என்றேன்.
ஸ்தபதியை
அழைத்து, ஊர்ப் பெரியவர்களுடன் கலந்து பேசி, பணியைத்
துவக்குமாறு கூறினேன்.
மலையில்
தண்ணீர் கொண்டு செல்வதற்கு மட்டும்
சுமார் ஆயிரம் ணுபாய் வரை தினமும்
செலவழிக்க வேண்டியிருந்தது.
அனைத்தையும் மலையில் ஏற்றிச் செல்லவேண்டும்.
இப்போதுதான்
நான் என்னை குருவியாகவும் இந்த
பொறுப்பை பெரிய மலையாகவும் நினைக்கலானேன்.
என்னால்
முடியுமா? என நினைத்தபோது, திருப்பங்கள்
நிறைய வந்தன.
(தொடரும்)