நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Showing posts with label சுயம்புவான சாயி. Show all posts
Showing posts with label சுயம்புவான சாயி. Show all posts

Thursday, 9 June 2016

பாபாவை தரிசிக்க



பாபாவை தரிசிக்க

வாரத்தில் ஒருநாள் பிள்ளைகளோடு பொழுதைக் கழிக்க நினைப்பவர்கள் கீரப்பாக்கம் பாபா ஆலயத்திற்கு ஞாயிறு அன்று விடுமுறை தினத்தில் வருவது சிறந்தது. பயணத் திட்டத்தை பின்வருமாறு வகுத்துக் கொள்ளலாம். வண்டலூர் உயிரியல் பூங்கா, ரத்தின மங்கலம் பாபா ஆலயம் மற்றும் குபேரர் ஆலயம், கீரப்பாக்கம் பாபா ஆலயம், கேளம்பாக்கம் மசூதி, கோவளம் கடற்கரை, மகாபலிபுரம் ஆகியவை வரிசையாக உள்ளன.
எந்தப் பக்கமிருந்து கீரப்பாக்கம் பாபா ஆலயத்திற்கு வருகிறீர்கள் என முடிவு செய்து கொள்ளுங்கள். வண்டலூர் வந்துவிட்டால் உயரியல் பூங்காவில் நுழைந்தால் குறைந்தது மூன்று மணி நேரமாவது சுற்றிப்பார்க்கவேண்டியிருக்கும். ஆகவே, அதை கடைசித் திட்டமாக வைத்துக்கொண்டு காலையில் ரத்தின மங்கலம் ஆலயத்தை தரிசித்துக் கொண்டு கீரப்பாக்கம் பாபா ஆலயம் சென்றுவிடலாம். அல்லது, நண்பகல் வரை வண்டலூரில் இருந்தால் மதிய நேரத்திற்குப் பிறகு கீரப்பாக்கம் ஆலயம் வந்து பாபாவை தரிசித்து சாப்பிட்டு நான்கு மணிக்கு மேல் இரத்தின மங்கலம் பாபா ஆலயத்தை தரிசிக்கச் செல்லலாம்.
போன்: 9841203311

Tuesday, 11 March 2014

கீரப்பாக்கத்தில் சுயம்புவான சாயி!


கீரப்பாக்கத்தில் மலையடிவாரத்தில் உள்ள புதர்களை சுத்தம் செய்தபோது, புற்றும் அருகே வேப்ப மரக்கன்றும் இருப்பது தெரியவந்தது. இந்த இடத்தினை பார்வையிட்ட கோபர்கான் சுவாமிகள், சுயம்புவாக எழுந்தருளி நாகசாயியாக பாபா ஏற்கனவே இந்த இடத்திற்க்கு வந்துவிட்டார். எனவே இந்த இடத்தில் சிறிய கோயில் அமைத்து, வேம்பின் அடியில் பாபா விக்ரகத்தையும் , புற்றின் இருபுறமும் ராகு கேது பிரதிஷ்டை செய்து வழிபட்டால், ராகு கேது தோஷம் விலகும் என்று அருளாசி வழங்கியிருக்கிறார். அதன்படியே ஆலயம் அமைக்கப்படவுள்ளது.

இந்த ஆலயத்தினை பெருங்களத்தூரின் முன்னாள் கவுன்சிலரும், அம்மன் தாசருமான நடராஜன் அவர்கள் கட்டித்தருகிறார்.

பாபா ஆலயம் தவிர, பக்தர்கள் தாங்கள் உபாசிக்கும் தெய்வத்திற்க்கான ஆலயங்களையும் இங்கே உருவாக்கித்தர முன்வந்திருக்கிறார்கள்

இந்த இடத்திற்க்கு காசிலி சுவாமியான அனந்த தீர்த்த மகராஜ் எழுந்தருளிச் சென்றதற்க்கு அடையாளமாக, காசிலி சுவாமி கோயில் என்ற கோயில் ஒன்றும் இங்கு அமைக்கப்படுகிறது. இதனை அனுமனுக்குப் பின்புறம் அமைத்திட காசிலி சுவாமி தெரிவித்தமைக்கு இணங்க அவ்வாறே அமைக்கப்படவுள்ளது.

கீரப்பாக்கத்தில் உருவாகவுள்ள கோயிலில் அமையவுள்ள இன்னும் பல விபரங்கள் தொடர்ந்து இங்கு வெளியிடப்படும். அவசியம் ஒருமுறை கோயில் அமையவுள்ள இடத்திற்க்கு வருகை தாருங்கள்.